ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Wednesday 19 October 2016

விழா மண்டபம்

கூந்தலூர் முருகன் திருக்கோவிலில், 
பக்தர்கள், பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ,

திருக்கோவில் " விழா மண்டபம்"  


திருமுருகன் பேரருளால் அமையப்பெற்று , மணவிழாக்கள் , மணிவிழாக்கள் மற்றும் இல்ல விசேஷங்கள் இனிதே நடைபெற்று வருகின்றன.

பிரமாண்டமான கட்டிட அமைப்பில் , கண்ணைக்கவரும் மலர்ச்சோலைகளின் நடுவிலே, அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்ற "விழா மண்டபம்"!


எளிதான போக்குவரத்து வசதிகள் , 
24 மணிநேர மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி.
600 அமரும் வசதி கொண்ட விழா மண்டபம்!
250 நபர்கள் அமரும் வகையில் உணவுக்கூடம்.
மிகக்குறைந்த கட்டணத்தில்!

வெளியூர் மற்றும் நவகிரக தரிசனம் செல்லும் அன்பர்கள் குறைந்த செலவில், மனநிறைவுடன் தங்கிச்செல்லும் வகையில் கட்டண விடுதி வசதி!
இயற்கை எழில் நிறைந்த கூந்தலூர் திருக்கோவில் "விழா மண்டபம்".