ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

Sunday 16 November 2014

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

17-11-2014

இன்று 

கார்த்திகை முதல் சோம வார சங்காபிஷேகம்!

 கார்த்திகை மாத முதல் நாள், சோம வாரத்தில், திங்கட்கிழமையில்  பிறக்கிறது.

சிவாலயங்களில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் உலகாளும் ஈசனுக்கு , சிவபெருமானுக்கு விஷேசமாக 108,1008 எண்ணிக்கைகளிலான  வெண் சங்குகளால் , சங்காபிஷேகம் சிறப்புற நடைபெறும்.

சிவனடியார்  மனமுருக சிவபெருமானை பூசித்து வணங்கும் நன்னாளாம் இன்று , கார்த்திகை மாத முதல் சோமவார சங்காபிஷகம் , திருக்கூந்தலூர் அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரருக்கு மாலை 4.30 மணியளவில் சிறப்புற நடைபெறும்.

அடியார்கள் வருக! சிவபெருமான் பேரருள் பெறுக!